லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் தற்போது தொலைக்காட்சி தாண்டி சிறு சிறு ப்ராஜெக்ட்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது காதல் விவகாரம் இணையத்தில் வைரலானது. கலர்ஸ் தமிழ் 'இதயத்தை திருடாதே' நாயகன் நவீனும், கண்மணியும் தாங்கள் காதலித்து வரும் தகவலை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், லைவ்வில் வந்த கண்மணி சேகர் இது தொடர்பில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அதில், 'என் வாழ்க்கையில் நடந்தது எல்லாமே எதிர்பாராதது தான். ஒருத்தரை கொண்டாடுவதும் வெறுப்பதும் அவரவர் விருப்பம். என்னை கொண்டாடுபவர்களுக்கு நன்றி. என்னை பிடிக்கவில்லையா ஓகே என்று கடந்துவிடுகிறேன். உங்களுடைய சப்போர்ட்டுக்கு நன்றி' என உருக்கமாக அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
அவர் இப்படி பேசியதற்கு காரணம் நவீன் தனது சக நடிகையான ஹீமா பிந்துவை திருமணம் செய்துகொள்வார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கண்மணியுடன் காதல் என்று அறிவித்தார். இதற்கிடையில் ஹீமா பிந்துவும் சமீப காலங்களில் சோகமான ஸ்டேட்டஸ்களை வைத்து வந்தார். இதனால் ஷாக்கான சில ரசிகர்கள் நவீனையும், கண்மணியையும் பற்றி நெகட்டிவாக பேசி வருகின்றனர். இதனால் தான் கண்மணி அந்த வீடியோவில் அப்படி பேசியுள்ளதாக தெரியவருகிறது.
ஆனால், நவீனும் பிந்துவும் ஆரம்பத்திலிருந்தே தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வந்துள்ளனர். அப்படியிருக்க தேவையில்லாமல் சிலர் நவீன் மற்றும் கண்மணியை பற்றி நெகட்டிவாக பேசுவது தவறு என சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.