மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்லதொரு புகழை அடைந்திருக்கும் தொடர் பாக்கியலெட்சுமி. எதிர்பாராத திருப்பங்களுடன் கோபியின் ரகசியம், கோர்ட், விவாகரத்து, இரண்டாவது திருமணம் என தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தொடரின் நாயகியான சுசித்ரா, பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்திலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சுசித்ரா, 'நான் சீரியலிலிருந்து விலகவில்லை. இப்போது கூட சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் புரமோஷனுக்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. நான் விலகுவதாக வெளிவந்த தகவல் பொய்யானது' என கூறியுள்ளார்.
பாக்கியலெட்சுமி தொடரின் டிஆர்பிக்கு நாயகியாக நடிக்கும் சுசித்ராவும் முக்கிய காரணம். அவரது நடிப்பை பார்த்து பல இல்லத்தரசிகள் அவரை தங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைத்து வருகின்றனர். இதற்காக ஒருமுறை விஜய் டிவியில் சிறப்பு விழா நடத்தப்பட்டு அதில் சுசித்ரா கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.