ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சில தினங்களுக்கு முன் இணையத்தில் நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் அவர் கன்னத்தில் நான்கு விரல்களின் தடம் பதிந்திருப்பதையும், கன்னம் வீங்கியிருப்பதையும் பார்த்து பலரும் பதறிப்போனார்கள். நடிகை குஷ்புவும் அதற்கேற்றார் போல் #ஸ்டேன்ட்வித்மீ, #ஸேநோடூவைலன்ஸ், #ஸ்பீக்அப்நவ் ஆகிய ஹாஸ்டாக்குகளை போட்டிருந்தார். இதனால் பலரும் குஷ்புவுக்கு ஏதோ அநீதி நிகழ்ந்துவிட்டதாக அவரை நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அது தொடர்பில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில் குஷ்புவை யாரும் அடிக்கவில்லை. அவர் புதிதாக நடிக்கும் சீரியலுக்கான புரோமோஷனுக்காக தான் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலுக்காக புதிதாக நடித்து வரும் சீரியல் மீரா. இதில் ஆணாதிக்க சிந்தனையுள்ள கணவரிடம் இருந்து பிரிந்து சென்று சொந்தக்காலில் ஜெயித்துக்காட்டும் பெண்ணாக குஷ்பு நடிக்கவுள்ளார். மேலும், இந்த சீரியல் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கேள்வி கேட்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.