'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார்.
செந்தில் - மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கண் கலங்கி நின்றவரை விஜய் டிவி கை கொடுத்து தூக்கிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சரண்யா துராடி நடிக்கும் இந்த கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.