தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளரான அனிதாவுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வந்தனர். செய்தியே கேட்காத பலரும் இவரை சைட் அடிப்பதற்காக குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை பார்க்க ஆரம்பித்தனர். அனிதாவின் புகழ் அதிகரிக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையினை நிறைவேற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால், அனிதாவுக்கோ சினிமாவிலும் செய்தி வாசிக்கும் கதாபாத்திரமே கிடைத்தது.
இந்நிலையில் தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அனிதா பரவலாக பிரபலமானலும், அவரது பெயரும் டேமேஜ் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், முந்தைய சீசனின் போது பாலாஜி மற்றும் அனிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பிறகு பாலாஜி ரவீந்தருடன் சமரசமாகி அவருடைய தயாரிப்பில் படமும் நடிக்கவுள்ளார். ஆனால், அனிதா - ரவீந்தர் பிரச்னை ஓயவில்லை.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதாவை ரவீந்தர் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் அவர், 'உன்னுடைய தந்திரம் இனி பலிக்காது. உன் பருப்பு இந்த தடவ வேகாது குழந்தை. பாலாஜி தம்பி செம க்ளாரிட்டி விளையாடிட்டு இருக்காரு. நீ திருந்தவே மாட்ட சகுந்தலா தேவி' என விமர்சித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ரவீந்தர் - அனிதா போர் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என சொல்லி வருகின்றனர்.