ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் பிரபலமான போட்டியாளர்களை வைத்து ஆரம்பம் முதலே அசத்தாலாக தொடங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் 'உங்களுக்கென்ன வேலை' என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் பேசிய ஜூலி, 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன், ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கும் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 23 லட்சம் பணம் தேவைப்படுவதாக தெரிய வந்தது. நான் நண்பர்கள் மற்றும் சோஷியல் மீடியா உதவியுடன் அக்குழந்தையின் மருத்துவ செலவுக்கான பணத்தை சேகரித்து கொடுத்தேன். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இந்த விஷயத்தை இன்று வரை நான் யாரிடமும் சொன்னதில்லை. எங்களுக்கு சொந்தவீடு கூட கிடையாது. இருப்பினும் இது போன்ற சமூக தொண்டாற்றுவது மனதிற்கு நெகிழ்வை தருகிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'ஒருவர் செய்யும் நல்ல செயல் வெளியே வராது. ஆனால், அவர்கள் செய்யும் சிறு தவறு கூட வைரலாக பரவி, சமூகத்தில் அவரை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது' எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரமங்கை, போராளி என பெயரெடுத்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொய்யாக நடித்ததால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் இன்று வரை ஜூலியை சோஷியல் மீடியாவில் நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.