பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? |
தமிழ் திரையுலகில் 80, 90 களில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் மூலம் அறிமுகமான அவர் தனது எதார்த்த நடிப்பினால் சிறந்த நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் அவ்வப்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் தோன்றி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ரேகாவுக்கு மீண்டும் திரை வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த ரேகா, சமீபத்தில்ல் தனது ஒரே மகளை பார்க்கமுடியவில்லை என வருத்தமாக போஸ்ட் போட்டிருந்தார்.
இதனையடுத்து ரேகா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ரேகாவின் முகஜாடையில் அழகாக இருக்கும் அவரது மகளின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஹார்டின்களை அள்ளிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் ரேகாவின் மகள் நடிக்க வருகிறாரா? என ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், வெளிநாட்டில் தங்கி படித்து, அங்கேயே வேலையும் பார்த்து வரும் ரேகாவின் மகளுக்கு நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிய வருகிறது. இதையறிந்த நெட்டிசன்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோயின் மிஸ்ஸிங் என பீல் செய்து வருகின்றனர்.