இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீ நிதி, ப்ரியா ராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தொடர் செந்தூரப்பூவே. 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ப்ரியா ராமன் வருகைக்கு பிறகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் ஒளிபரப்புவதற்கான டைம் ஸ்லாட் கிடைக்காமல் சில சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன, சில சீரியல்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. தற்போது பிக்பாஸ் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் செந்தூரப்பூவே தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை அந்த சீரியலின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிக விரைவில் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.