ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீ நிதி, ப்ரியா ராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தொடர் செந்தூரப்பூவே. 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ப்ரியா ராமன் வருகைக்கு பிறகு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் ஒளிபரப்புவதற்கான டைம் ஸ்லாட் கிடைக்காமல் சில சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டன, சில சீரியல்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. தற்போது பிக்பாஸ் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் செந்தூரப்பூவே தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனை அந்த சீரியலின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிக விரைவில் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.