காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாகும் கனவோடு இருந்திருக்கிறார். அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூடன் திருமணம் நிச்சயம் நடந்தது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அது திருமணத்தில் முடியவில்லை. ஆர்.கே.சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த வருத்தத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் திவ்யா, தற்போது விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். வக்கீலாக நினைத்தவர் இன்று பலருக்கும் பிடித்த பாக்கியலெட்சுமி ஜெனியாக வலம் வருகிறார்.