மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை |

தென்னிந்திய மொழிகளில் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை நேஹா கவுடா. பெங்களூரை சார்ந்த நேஹா கவுடா ஒரு தியேட்டர் நடிகை. எனவே, அவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. தமிழ் சின்னத்திரையில் கல்யாண பரிசு சீரியலின் மூலம் அறிமுகமான நேஹாவை, தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்த சீரியல் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் தான்.
இந்நிலையில் நேஹாவின் காதல் கதை தமிழ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கலர்ஸ் கன்னடா டிவியில் நடன போட்டியில் சாந்தனும் - நேஹா கவுடாவும் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நேஹா, 'நானும் சாந்தனும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள், அவர் என்னிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலை சொல்லிவிட்டார். முதலில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவிலேயே இருவரும் காதலர்களாக மாறிவிட்டோம்' என கூறியுள்ளார். நேஹா - சாந்தன் ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. கன்னட தொலைக்காட்சிகளில் ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.