வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் |
கவுதம் மேனன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். உடல் எடையை குறைத்த வித்யூலேகா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து சமீபத்தில் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார். அப்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை அவர் தமது சமூக பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலிருந்து நெகட்டிவ் கமெண்டுகள் வர தொடங்கின. இந்த நிலையில் இது தொடர்பாக கொந்தளித்து ஒரு பதிவிட்டிருக்கிறார் வித்யூலேகா.
அந்த பதிவில், “நான் நீச்சல் உடையிலான புகைப்படத்தை பகிர்ந்ததற்காக இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்? அதிலும் சில மெசேஜ்களை பார்க்கவேண்டுமே? “உங்களுடைய விவாகரத்து எப்போ?”.. என்கிற அளவுவரை கேட்டிருக்கிறார்கள்.
1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள். நெகட்டிவ் கமெண்டுகளில் இல்லை பிரச்சனை. நம்முடைய சமூக சிந்தனையில் தான் சிக்கல். ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை அணிந்து இருக்கும் பெண்கள் எல்லாம் தங்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?” என்று கோபமாக கொந்தளித்து தன்னுடைய பதிவில் கேட்டிருக்கிறார்.