மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'பாகுபலி' படத்தின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்துள்ளவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது 'சலார், ஆதிபுருஷ்' என்ற இரண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் கதை எழுதி வருகிறாராம். அடுத்தடுத்து சில படங்களை பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தை ஆரம்பிப்பது தள்ளிப் போனது என்கிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தை ஹிந்தியில் 'கபீர் சிங்' என் ரீமேக் செய்து அங்கும் பெரிய வெற்றி பெற்றவர் சந்தீப். தற்போது 'அனிமல்' என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸின் 25வது படத்தில் சந்தீப் இணைந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.