‛ஜீ5' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை இந்திரஜா அளித்த பேட்டி: இதில் பங்கேற்க வேண்டுமா என யோசித்தேன். பயமும் இருந்தது. அப்பா தைரியம் கொடுத்ததால் பங்கேற்றேன். நிகழ்ச்சி நான் எதிர்பார்த்தது போலவே சவாலாக இருந்தது. இனிமேல்தான் சாவல்கள் அதிகமாக இருக்கும். ஒரு சில தருணத்தில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஆனால் இதையெல்லாம் ஒத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன் என்பதால், பொறுத்துக் கொண்டேன். வலிமை மட்டுமின்றி அதிர்ஷ்டமும் இருந்தால் இதில் வெற்றி பெற முடியும். இதில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.