துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமாகி சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர். தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'புஷ்பா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. நிறைய எண்ணெய்யுடன் கூடிய அழுந்த வாரிய தலை, ஒரு பக்க மூக்குத்தி, புடவை அணிவதற்கு முன்பாக தன்னை அழுகுபடுத்திக் கொள்ளும் விதத்தில் காதில் கம்மள் அணியும் ராஷ்மிகா, உட்கார்ந்திருக்கும் விதமே அப்படியே கிராமத்துப் பெண் போலவே உள்ளது.
திருமணத்திற்கு முன்பு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாரா அல்லது ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக இந்த அலங்காரமா என்பது தெரியவில்லை. பக்கா மாடர்ன் பெண்ணான ராஷ்மிகாவை இப்படி மாற்றிவிட்டார்களே என ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.