பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார், தில் ராஜ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு இயக்குனர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜும் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தரிசனம் முடிந்து வெளியி்ல் வந்ததும் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
மகரிஷி படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது பெருமாளுக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு வந்து தரிசனம் செய்ய நினைத்தோம். ஆனால், அப்போது கொரோனா தொற்று அதிகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் வரமுடியவில்லை. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படத்தை அறிவித்துள்ளோம். எனவே, இதுவே தரிசனம் செய்ய சரியான நேரம் என்று நானும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் நினைத்தோம். அதற்காகவே வந்தோம்.
கடவுளின் ஆசியில்லாமல் எதுவும் நடக்காது என்று நம்புபவர்கள் நாங்கள். விஜய்யை நான் இயக்குவதும் இறைவனின் நாட்டம் என்றே நம்புகிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும். அதை மட்டுமே இப்போதைக்கு என்னால் கூற முடியும். விஜய் ஒவ்வொரு படத்திலும் புதிதாகத் தெரிவார். எனது படத்தில் இன்னும் புதிதாக தெரிவார். எனக்கு அவருடன் இது புது அனுபவம். விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவனின் அருளே. இறைவனின் நாட்டமே. இன்னும் சில நாட்களில் மற்ற விபரங்களை அறிவி்ப்போம். என்றார்.