நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அசோக்குமார், யாஷிகா ஆனந்த் நடித்த பெஸ்டி படத்தை சாரதிராஜா தயாரிக்க, ரங்கை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் கூறியதாவது:
இளமை துள்ளலுடன், திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்த பின் யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் கிளாமரில் மட்டுமல்லாது நடிப்பிலும் அவர் அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றார். அமெரிக்காவில் நடந்த லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடந்த விர்ஜின் ஸ்பிரிங்' திரைப்பட விழாவில் அசோக்குக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கதை சொல்லல், திரைக்கதை அமைத்தல், இயக்கம் என ‛பெஸ்டி' படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. மேலும் பல விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.