லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
அசோக்குமார், யாஷிகா ஆனந்த் நடித்த பெஸ்டி படத்தை சாரதிராஜா தயாரிக்க, ரங்கை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் கூறியதாவது:
இளமை துள்ளலுடன், திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்த பின் யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் கிளாமரில் மட்டுமல்லாது நடிப்பிலும் அவர் அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றார். அமெரிக்காவில் நடந்த லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடந்த விர்ஜின் ஸ்பிரிங்' திரைப்பட விழாவில் அசோக்குக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கதை சொல்லல், திரைக்கதை அமைத்தல், இயக்கம் என ‛பெஸ்டி' படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. மேலும் பல விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.