காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களிலும், வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா பார்வை' என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனந்தி இந்த தொடரில் இரண்டாம் கதாநாயகியாக வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடரின் நாயகன் முனாஃப் ரகுமானுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், 'விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
'ராஜ பார்வை' தொடர் தினமும் பிற்பகல் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது