காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களிலும், வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா பார்வை' என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனந்தி இந்த தொடரில் இரண்டாம் கதாநாயகியாக வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடரின் நாயகன் முனாஃப் ரகுமானுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், 'விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
'ராஜ பார்வை' தொடர் தினமும் பிற்பகல் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது