காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கி முடித்துள்ள ஜெயில் படம் தயாரிப்பாளருக்கு இருக்கும் பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் தனது பள்ளி நண்பர்களின் கூட்டுத் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கு தற்போது அநீதி என்று தலைப்பு வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிசிஸ்ரீராம் இணைந்து சமூக வலைதளத்தில் படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ‛‛எங்கள் அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் முதல் குழந்தைக்கு பெயர் சூட்டியாகிவிட்டது உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் நன்றி" என்று வசந்தபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் மாஸ்டர் பட புகழ் அர்ஜுன் தாஸ், சர்பட்டா பரம்பரை புகழ் துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.