புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
2017ம் ஆண்டு நடைபெற்ற போதைப் பொருள் விவகார வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவரிடம் நடைபெற்ற விசாரணயை அடுத்து 12 தெலுங்கு சினிமா பிரபலங்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கை போதைப் பொருள் விவகாரத்துடன், பணமோசடி வழக்காகவும் விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சார்மி, நடிகர் நந்து ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதை அவர்கள் விசாரணையின் போது தாக்கல் செய்தனர்.
விசாரணையின் அடுத்த பகுதியாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுட்டி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ராணாவுக்கு அடுத்து தெலுங்கு ஹீரோவான ரவி தேஜா ஆஜராக உள்ளார்.
கால்வினின் மொபைல் போனில் உள்ள சினிமா பிரபலங்களின் எண்கள், அவரது கணக்கிற்கு வந்த பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட் ஆகிய இடங்களில் போதைப் பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக கோலிவுட்டில் இப்படி யாரும் இந்த சர்ச்சையில் சிக்கவில்லை.