ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கவனத்தை திருப்பிய அவருக்கு பிக்பாஸ்-4 திருப்புமுனையாக அமைந்தது. சினிமாவில் நடித்தபோதுகூட யாருக்குமே தெரியாமல் இருந்து வந்த அவர் குக் வித் கோமாளி, பிக்பாஸிற்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின் இன்னும் பிரபலமாகி விட்டார்.
அதனால் மறுபடியும் சினிமாவில் பெரிய அளவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரம்யாபாண்டியனுக்கு தற்போது சூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படம் வரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதையடுத்து கமர்சியல் கதைகளில் நடிப்பதற்கு இரண்டு நிறுவனங்கள் ரம்யா பாண்டியனிடத்தில் பேசி வருகின்றன. அதனால் தனது முந்தைய படங்களில் எல்லை தாண்டாமல் நடித்திருந்த அவர், அடுத்தபடியாக நடிக்கும் புதிய படங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சி கலாச்சாரத்துக்கு மாறிவிடுவார் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன.