பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
பவன் கல்யாண், தற்போது ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் இந்த வருஷத்திலேயே வெளியாக உள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தை முடித்ததும், அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பவன்கல்யாண். ஏற்கனவே இந்த கூட்டணி கப்பார் சிங் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கூட்டணி தான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி முடித்துவிட்டாராம் ஹரிஷ் சங்கர். ஏற்கனவே அவரது இயக்கத்தில் துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா ராஜு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. அதேசமயம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசி வருகிறாராம் ஹரிஷ் ஷங்கர்.