எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி, வாழ்க்கையில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து மாஸ்டர் செப் ஷோவில் பேசினார். மேலும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர் கருத்துகளை கூறினார்.
மாஸ்டர் செப் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த ஷோ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று அந்த மூன்று பேருக்கும் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதனையடுத்து நிகழ்கியில் பேசியுள்ள விஜய் சேதுபதி, ஆரம்ப கட்டத்தில் என்னை ஹீரோ மூஞ்சி இல்லை என சொல்வார்கள். என்னை ஏன் அவன் தவறாக நடத்துகிறார்கள், ஏன் கலாய்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அதற்கான பதிலை நான் எனக்குள்ளே தேட ஆரம்பித்தேன். வேலை என்பது வெளியே நடப்பது இல்லை, நம் உள்ளே நடப்பது." என கூறி போட்டியாளர்களுக்கு ஊக்கம் வகையால் பேசினார். மாஸ்டர் செப் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.