பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல். விஜய் இயக்க, ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்காக சென்னை வந்திருந்தார் கங்கனா. சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் தொடர்ந்து எம்ஜிஆர்., கருணாநிதி நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
தலைவி பிரஸ்மீட்டில் கங்கனா பேசியதாவது : கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் படம் இது. இன்னும் நோய் தொற்று குறையவில்லை. இருந்தபோதிலும் நாம் நமது வேலைகளை துவங்க வேண்டி உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய ஏற்ற, இறக்கங்கள். ஏப்., 23ல் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தோம். கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. இந்த முறை தியேட்டருக்கு வருகிறோம்.
நிறைய தடைகளை கடந்து இந்த படம் ரிலீஸை நெருங்கிவிட்டது. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஒரு குழந்தைபோல் இந்த படத்தை காண, குறிப்பாக தமிழ் பதிப்பை காண ஆவலாய் உள்ளேன். இதுமாதிரியான கதைகளை சித்தரிக்க சரியான நடிகர்களை தேர்வு செய்த இயக்குனர் விஜய்க்கு நன்றி. அரவிந்த்சாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா, மதுபாலா உள்ளிட்டவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.