பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

தெலுங்கு சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர். ஆனால் அப்படிப்பட்ட படத்திற்கு ஒரு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் அவர் அல்லாடி வருவது தான் மிகப்பெரிய விஷயமாக தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய விரும்புகிறார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் அதே நாளில் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படமும் அதே சங்கராந்தி பண்டிகையில் தான் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகையில் வெளியாக உள்ள படங்களின் ஹீரோக்களிடம் ராஜமவுலி தனது ஆர்ஆர்ஆர் படத்திற்காக விட்டுக்கொடுக்குமாறு நட்புடன் கோரிக்கை வைத்து வருகிறாராம். ஆனால் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற பிரபாஸ், அவரது கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக கைவிரித்து விட்டாராம்.
அதேசமயம் மகேஷ்பாபு ராஜமவுலியின் கோரிக்கைக்கு இணங்கி தனது படத்தின் தேதியை மாற்றி வைத்துக் கொள்ள சம்மதித்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதேபோல மகேஷ்பாபு தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பதும் மகேஷ்பாபுவின் இந்த இணக்கமான முடிவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.