பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல். விஜய் இயக்க, ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் செப்., 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி : ‛‛திறமையான நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் விஜய்க்கும் நன்றி. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். இது ஒரு மாஸ்டர் கிளாஸாக இருக்கும். கங்கனா, தம்பிராமையா, மதுபாலா, சமுத்திரகனி எல்லோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். 30 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். நிறைய பேருடன் பணியாற்றி உள்ளேன். நிறைய கற்று உள்ளேன். விஜய்யிடம் சிறப்பான திறமை உள்ளது.
என் திரைவாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். நிறைய பேர் என்னை புகழ்ந்து பேசினார்கள். அதற்கு நான் தகுதியானவனா என்று எப்போதும் என்னை கேட்டுக் கொள்வேன். இருந்தாலும் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். இந்த படம் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று காத்திருந்து ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது ஒரு அற்புதமான படம். மக்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து பார்ப்பார்கள். படம் சிறப்பாக வந்துள்ளது. அதை பின்னணி இசையோடு படத்தை இன்னும் வேற லெவலுக்கு ஜிவி.பிரகாஷ் கொண்டு சென்றுள்ளார். அவருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என் நன்றி.
இவ்வாறு அரவிந்த்சாமி பேசினார்.