ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தலைவி படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்பட பிரஸ்மீட்டில் பேசிய அவர், ‛‛கொரோனா முதல் அலைக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வர வழைத்தது. இரண்டாவது அலைக்கு பின் இப்போது மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் தகுதி உடைய படமாக தலைவி இருக்கும். பெண்களின் ரோல் மாடலாக தலைவி படத்தின் தலைவியாக கங்கனா உள்ளார். கடற்கரையில் உறங்கும் 4 தலைவர்களை வட இந்திய நடிகையை வைத்து மரியாதையை செய்தது சிறப்பான ஒன்று.
எதிரிகளே இல்லாத ஒரு நபர் அரவிந்த்சாமி. இவரைப்போல் நான் அழகாக இருந்திருந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பேன் அல்லது செத்திருப்பேன் என்றார். ஜாதி, மதம், இனம் கடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்லும் ஒரு இடம் தியேட்டர்கள். அவை இப்போது மால்களாக, கடைகளாக, திருமண மண்டபங்களாக மாறுகின்றன. அவற்றை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என சிறப்பு கவனம் கொண்டு கேட்டு தியேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். தியேட்டர்களை காப்பாற்றிவிட்டால் சினிமாவையும் காப்பாற்றி விடலாம்''. என்றார் தம்பி ராமைய்யா.