முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
தலைவி படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்பட பிரஸ்மீட்டில் பேசிய அவர், ‛‛கொரோனா முதல் அலைக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வர வழைத்தது. இரண்டாவது அலைக்கு பின் இப்போது மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் தகுதி உடைய படமாக தலைவி இருக்கும். பெண்களின் ரோல் மாடலாக தலைவி படத்தின் தலைவியாக கங்கனா உள்ளார். கடற்கரையில் உறங்கும் 4 தலைவர்களை வட இந்திய நடிகையை வைத்து மரியாதையை செய்தது சிறப்பான ஒன்று.
எதிரிகளே இல்லாத ஒரு நபர் அரவிந்த்சாமி. இவரைப்போல் நான் அழகாக இருந்திருந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பேன் அல்லது செத்திருப்பேன் என்றார். ஜாதி, மதம், இனம் கடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்லும் ஒரு இடம் தியேட்டர்கள். அவை இப்போது மால்களாக, கடைகளாக, திருமண மண்டபங்களாக மாறுகின்றன. அவற்றை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என சிறப்பு கவனம் கொண்டு கேட்டு தியேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். தியேட்டர்களை காப்பாற்றிவிட்டால் சினிமாவையும் காப்பாற்றி விடலாம்''. என்றார் தம்பி ராமைய்யா.