சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நடிகர் விஷால் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், தயாரித்து நடிக்க ஆரம்பித்த படம் 'துப்பறிவாளன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு ஆரம்பமாகி ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்தது. படத்திற்கு மிஷ்கின் அதிக பட்ஜெட் இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். விஷால் தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்கவில்லை.
அதற்குப் பிறகு அவர் நடித்த 'ஆக்ஷன், சக்ரா' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. 'எனிமி' என்ற படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அடுத்து 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றோடு தனது 32வது படத்தில் இன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'துப்பறிவாளன் 2' படம் மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.
'துப்பறிவாளன்' படத்தின் முதல் பாகம் 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 'துப்பறிவாளன் 2' படத்தை விட்டு விலகிய பிறகு தான் ஆரம்பித்த, 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் இன்று முடித்துவிட்டார்.