கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
யு டியூப் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரித்ததைத் தொடர்ந்து சினிமா பாடல்கள் அல்லாமல் தனியிசைப் பாடல்களும் ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளன. அந்த விதத்தில் அறிவு, தீ இருவரும் இணைந்து பாடிய வீடியோ ஆல்பமான 'எஞ்சாமி' பாடல் யு டியூபில் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. 324 மில்லியன் பார்வைகளை அது யு டியூபில் கடந்துள்ளது.
இதனிடையே, இப்பாடலின் பிரபலத்தில் அறிவு இருட்டடிக்கப்படுகிறார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக எழுந்தது. அறிவுக்கு ஆதரவாக இயக்குனர் பா.ரஞ்சித் குரல் கொடுத்ததும் மேலும் பரபரப்பாக அமைந்தது. அதன்பின் அந்தப் பாடலைத் தயாரித்த மாஜா அதற்கு விளக்கத்தைக் கொடுத்தது.
இருப்பினும் அதை வேறுவிதமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நேற்று பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது 'எஞ்சாமி' பாடகர்களான அறிவு, தீ ஆகியோருடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதை தனுஷ் அவரது டுவிட்டர் தளத்தில் “எஞ்சாமிக்களுடன், ஒரு பில்லியனில் பாதி புகைப்படம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவை ரிடுவீட் செய்துள்ள சந்தோஷ் நாராயணன், புகைப்படத்தை எடுத்தது தான்தான் என்று தெரிவித்துள்ளார்.