''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்களை பொறுத்தவரை விஜய்சேதுபதியின் படங்களுக்கு போட்டி அவரது படங்கள் தான் என்கிற நிலை உருவாகியுள்ளது. முன்பு ஒரு சமயத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடித்த படங்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ரிலீசாவது வழக்கமாக இருந்தது. அதனாலேயே அவரை வெள்ளிக்கிழமை நாயகன் என்றே அழைத்தார்கள். தற்போது அவரது இடத்திற்கு விஜய்சேதுபதி முன்னேறுகிறாரோ என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது..
உண்மைதான்.. வரும் செப்-9ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படம் தியேட்டர்களில் வெளியாகிறது என்றால் அதற்கு அடுத்த நாள் செப்-10ஆம் தேதி அவரது இன்னொரு படமான துக்ளக் தர்பார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகவே ரிலீஸாகிறது. அதேபடம் அதற்கு மறுநாள் ஒடிடியில் வெளியாகிறது.
இன்னொரு பக்கம் விஜய்சேதுபதி - டாப்ஸி நடித்துள்ள அனபெல் சேதுபதி படமும் வரும் செப்-19ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஏற்கனவே நடித்து முடித்துள்ள கடைசி விவசாயி படத்தையும் வரும் செப்டம்பர் மாதமே ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றனவாம்.
முதலில் பிரபலமான ஒடிடி தளத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தவர்கள், தற்போது முடிவை மாற்றிக்கொண்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்கிற முன்னெச்சரிக்கை காரணமாகவே விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அனைவரும் இப்படி முண்டியடிக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.