கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் வெளிவந்த 'முப்டி' என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படக்குழுவை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சிம்பு வெளியேறியதாக தகவல் வெளியானது. அதன்பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவேயில்லை. தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்தார்.
அதன்பின் படத்தை ஆரம்பத்தில் இயக்கிய நார்தன் படத்தை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'பத்து தல' என படத்திற்குப் பெயர் வைத்து அதன் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை வைத்து வெளியிட்டார்கள். சிம்புவின் மற்ற படங்களுக்கான பழைய பஞ்சாயத்துகள் சமீபத்தில்தான் முடிந்தது. அதனால், இப்படத்தையும் சிக்கலில்லாமல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு புதிய ஆரம்பம், நீண்ட நாட்களாக நான் காத்திருந்த ஒரு பயணத்தின் ஆரம்பம், முதல் நாள், பத்து தல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்படும் என்று தெரிகிறது. 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துக் கொண்டே இப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளாராம்.