புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் அண்ணன், தங்கையாக நடித்த பாசமலர் படம்தான் இன்றைக்கும் அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக சொல்லப்படும் படம். தற்போது சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிக்கும் உடன்பிறப்பே படம் நவீன பாசமலர் என்கிறார் இயக்குனர் சரவணன். பத்திரிகையாளரான இவர் ஏற்வெனவே தஞ்சை விவசாய பிரச்சினையை மையமாக கொண்டு கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கியவர்.
உடன்பிறப்பே பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: கத்துக்குட்டி படத்துக்கு பிறகு அடுத்த படம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் கதையோடு சில காலம் அலைந்தேன். கடைசியில் சூர்யா வீட்டு கதவு திறந்தது. சூர்யா சார் டீமில் அனைவருமே கதையை கேட்டுவிட்டு இது நவீன பாசமலர் என்றார்கள். நான் பத்திரிகையாளராக இருக்கும்போது ஜோதிகா எனக்கு அறிமுகம் என்பதால் அவரும் என்னை நம்பி படத்துக்குள் வந்தார். அவரின் 50வது படமாக இதில் நடிக்க முடிவெடுத்தார்.
முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக அவர் மாறி நடித்தார். பாசமும், கம்பீரமும் மிக்க பெண்ணாக படம் முழுக்க வலம் வருவார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத தூய மனிதராக சசிகுமார் நடித்திருக்கிறார். இவர் மாதிரி வாழணும் என்று நினைக்க வைக்கிற மாதிரியான கேரக்டர் அவருடையது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்தை நல்லபடியாக உருவாக்க உதவியது.