புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்குகிறார். இதில் பரத், வாணி போஜன் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார், ராஜ்குமார், காவ்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தென்காசியில் தொடங்கி உள்ளது. முழு படப்பிடிப்பும் தென்காசியை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது எனது 12வது தயாரிப்பு. இது ஸ்லாஷர்-த்ரில்லர் வகையில் முழுக்க முழுக்க தென்காசியில் எடுக்கப்படவுள்ளது.
இயக்குநர் எம்.சக்திவேல் எனக்கு ஸ்கிரிப்ட்டை விவரித்தபோது, படத்தின் பல இடங்கள் ஆச்சர்ய திருப்பங்கள் தருவதாக இருந்தது. இக்கதையை கேட்ட பிறகு பரத் மற்றும் வாணி போஜன் இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது. திரைக்கதை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக இருவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களும் அவரது கதாப்பாத்திரம் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது என்பதை உணர்ந்து உடனடியாக ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியிடவுள்ளோம். என்றார்.