2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மேலும் தனக்காகவும் ஒரு கதை தயார் செய்யுமாறு அந்த போன் காலில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறியுள்ளார் என்கிறார்கள்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி விஜய்யிடம் ஒரு படத்தின் கதையை கூறவே அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே ரஜினியை அடுத்து அவர் விஜயுடன் கூட்டணி அமைக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கும் படம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.