ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுப்பிரமணியன் வழக்கிற்கான தீர்ப்பை வழங்கினார்.
நடிகர் என்று வழக்கில் குறிப்பிடவில்லை, சாமானிய மனிதர்கள் வரி கட்டும் போது நிங்கள் ஏன் வரி கட்ட மறுக்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அது குறித்த செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்ததும் டுவிட்டரில் தனுஷிற்கு எதிராக 'வரிகட்டுங்க தனுஷ்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் வந்தது. சிம்பு ரசிகர்கள்தான் அந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாக டுவிட்டர் தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் மோதிக் கொள்வார்கள். இது போன்று சொகுசு கார் இறக்குமதி வரி விவகாரத்தில் விஜய்க்கு கடந்த மாதம் நீதிபதி கண்டனம் தெரிவித்த அன்று கூட 'வரி கட்டுங்க விஜய்' என்பது டிரெண்டானது. அது போலவே இன்று 'வரி கட்டுங்க தனுஷ்' என்பதை டிரெண்டிங் செய்துள்ளார்கள்.
சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தனுஷின் 44வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் தனுஷ் மீதான சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.