நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்த விஜய், அதற்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நீதிபதியின் விமர்சனத்துக்கு உள்ளானதோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விஜய்க்கு விதிக்கப்பட்டது. பின் மேல்முறையீடு அபராதத்தில் இருந்து இடைக்கால தடை பெற்றார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுசும் 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கிய காருக்கு வணிக வரித்துறை ரூ. 60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரிவிதித்தது. அதையடுத்து அந்த வரியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். அதோடு,50 சதவிகித வரியை செலுத்தினால் காரை பதிவு செய்யவும் வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது வணிக வரித்துத்றை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதியான நாளை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தனுஷின் வழக்கு விசாரணையில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியிருக்கிறது.