ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. தொடர்ந்து அவர் காமெடி படங்களில் நடித்தாலும் மண்டேலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது வெளியாக உள்ள நவரசா அந்தாலஜி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது சின்னத்திரையிலிருந்து ஏராளமான காமெடி நடிகர்கள் புதிதாக வருவதால் தன்னை ஒரு குணசித்ர நடிகராக முன்னிறுத்திக் கொள்ள நினைக்கிறார் யோகி பாபு. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன்.
நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ்சினிமாவின் மூத்த ஆளுமைகளான நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனதை கவர்ந்துள்ளனர். ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணியும், நீர்க்குமிழி படத்தில் நாகேசும் குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் யடப என்கிறார் யோகி பாபு.