மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து, பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த பாடலை முதல்வர் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை.