இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது சர்கார் படம். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அரசின் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "தணிக்கை முடிந்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது " என்று தீர்பளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.