ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்பட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது கடமையை செய், பாம்பாட்டம் உள்பட ஐந்து படங்களில நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் சென்னையை நோக்கி காரில் வந்தபோது மகாபலிபுரம் அருகே சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை யாஷிகா தான் ஓட்டி வந்துள்ளார். இதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சிகிச்சையில் உள்ள யாஷிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் காரை தான் ஓட்டி வந்ததாக கூறியுள்ள யாஷிகா, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. என் தோழி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.
மேலும், இந்த கார் விபத்தில் யாஷிகா ஆனந்தின் வலது கால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து யாஷிகாவின் சினிமா தோழியான நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நலமுடன் இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பவர், அவர் விரைவில் பூரண குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.