ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |

2025ம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வாரங்களில் அதைவிட அதிகமான படங்களும் வெளிவருகிறது.
நேற்று, “காந்தி கண்ணாடி, மதராஸி, திறந்திடு கதவே திறந்திடு' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கை 180த் தொட்டுவிட்டது. இந்த மாதத்திலேயே அது 200ஐக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி, “அந்த 7 நாட்கள், பிளாக்மெயில், பாம், தாவுத், குமாரசம்பவம், தணல், உருட்டு உருட்டு, யோலோ,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில படங்களுக்கு இன்னும் தியேட்டர்கள் ஒப்பந்தம் முழுமையாக முடியவில்லை. அறிவித்தபடி அனைத்து படங்களுமே வெளியாகுமா அல்லது அவற்றில் ஒரு சில பின்வாங்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்த 'இட்லி கடை' படமும், பின்னர் தீபாவளிக்கு நான்கைந்து படங்களும் வெளியாக உள்ளது. அதனால், கிடைக்கும் இடைவெளியில் சிறிய படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடந்து புதிய சாதனை படைக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.




