நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
1990களில் கனவு கன்னியாக இருந்த குஷ்பு, சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த ஜாக்கெட்டும் பிரபலமானது. அதன்பிறகு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அரசியலுக்கு போனார், தி.மு.க, காங்கிரசில் இணைந்த அவர் தற்போது பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் குஷ்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.