ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
1990களில் கனவு கன்னியாக இருந்த குஷ்பு, சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த ஜாக்கெட்டும் பிரபலமானது. அதன்பிறகு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அரசியலுக்கு போனார், தி.மு.க, காங்கிரசில் இணைந்த அவர் தற்போது பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் குஷ்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.