என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
1990களில் கனவு கன்னியாக இருந்த குஷ்பு, சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த ஜாக்கெட்டும் பிரபலமானது. அதன்பிறகு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அரசியலுக்கு போனார், தி.மு.க, காங்கிரசில் இணைந்த அவர் தற்போது பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் முழுக்க முழுக்க திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் குஷ்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.