பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது கோல்கட்டாவில் நடந்து வருகிறது. அதற்காக படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கோல்கட்டா சென்றுள்ளார்.
ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. கொரோனா இரண்டாவது அலையின் போதும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
அதன்பின் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இங்கு சில நாள் ஓய்விற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவற்றை முடித்து விட்டு சென்னை திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, தனது அரசியல் பிரவேசத்தின் விட்ட குறை தொட்ட குறையையும் முடித்து வைத்தார். தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அந்த சூட்டோடு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்த பின் அவரது புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகும்.