விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு |
செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என சில படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து புதுப்பேட்டை-2வில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவனோ நானே வருவேன் என்ற பெயரில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் 43ஆவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்திற்கு வைத்துள்ள நானே வருவேன் என்ற தலைப்பு ரொம்ப சாதாரணமாக உள்ளது என்று தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து டைட்டிலை மாற்றுமாறு சோசியல் மீடியாவில் கூறிவந்தனர்.
அதன் எதிரொலியாக நானே வருவேன் டைட்டிலை மாற்றும் ஆலோசனையில் செல்வராகவன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராயன் என்ற மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வராகவன்தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.