துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றபடி அவரும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்னையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ‛அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டிங் பணியில் பிசியாக இருந்தார். படப்பிடிப்பை முடித்த ரஜினி, டப்பிங் பணியை ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.
![]() |
இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக தனது வீட்டில் இருந்து கிளம்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என சொன்னப்பிறகு என் மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. அண்ணாத்த திரைப்பட சூட்டிங் தாமதமானது, அதன்பிறகு தேர்தல் வந்தது, கோவிட் பரவல் இருந்தது. அதற்கு பிறகு, என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக நான் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன்.
![]() |
இந்நிலையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு ரஜினி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : ‛‛ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளதுது. அதை விளக்க வேண்டியது என் கடமை.
![]() |