திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள மலையாள நடிகர் பஹத் பாசில், வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களில் நடித்தார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கமல் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். அதேபோல கமலுடன் இணைந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் பஹத், கமலிடம் கேட்பதற்கென ஒரு கேள்வியை வைத்துள்ளாராம்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கமலின் மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா ஆகிய படங்களை பார்த்து வியந்துள்ளேன். அவரை நேரில் பார்க்கும்போது இதயெல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிந்தது என்கிற ஒரே ஒரு கேள்வியை மட்டும் அவரிடம் கேட்க போகிறேன்” என கூறியுள்ளார் பஹத் பாசில்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமல் தனது தசாவதாரம் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டபோது, அவரிடம் 'மைக்கேல் மதன காமராஜன்' படம் உருவான விதம் பற்றி சொல்லுங்கள் என மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.