காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் தனுஷின் 43வது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் படத்திலிருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் பரவியது. அது மட்டுமல்ல படத்தின் நாயகன் தனுஷ் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் என்றும் சொன்னார்கள்.
அந்தத் தகவல் வதந்தி அளவிற்கு வேகமாகப் பரவியது. 'ஜகமே தந்திரம்' கொடுத்த அடியால்தான் தனுஷ் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்றும் கோலிவுட்டில் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சற்று முன் ஒரு டுவீட் செய்துள்ளது.
அதில் கார்த்திக் நரேன் சொல்வதை தனுஷ் கேட்பது போன்ற புகைப்படத்துடன் “டி 43 கடைசி கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது,” என்றும் குறிப்பிட்டு தனுஷையும், கார்த்திக் நரேனை மட்டும் 'டேக்' செய்துள்ளார்கள்.