Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு - ஆச்சரியப்படுத்திய சிம்பு

10 ஜூலை, 2021 - 04:15 IST
எழுத்தின் அளவு:
Simbu-sruprise-every-one

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்தவர் சிலம்பரசன். சினிமாவைப் பற்றிய அவரது திறமைக்கு இந்நேரம் எங்கேயோ உயர்ந்திருக்க வேண்டியர் என்று திரையுலகத்திலேயே சொல்வார்கள்.

தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கே, ஏன் அவரது அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் கூட வரமாட்டார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராதவர் என்று பெயரெடுத்தவர்.

கடந்த சில வருடங்களாக சிலம்பரசனிடம் பல மாற்றங்கள். மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் போது சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். சிம்புவா இது என அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து கடந்த வருடம் வெளிவந்த ஈஸ்வரன் படத்திலும் குறுகிய காலத்தில் அப்படத்தை நடித்துக் கொடுத்தார்.

இப்போது மாநாடு படத்தை படக்குழுவினரே ஆச்சரியப்படும் அளவிற்கு சரியான நேரத்திற்கு வந்து முடித்துக் கொடுத்துள்ளார். “85 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 68 நாட்களில் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் சிலம்பரசன் கொடுத்த ஆதரவு,” என படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பாராட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் சிலம்பரசனைப் பற்றி ஒரு நாள் கூட குறை சொல்லவில்லை என்பதும் ஆச்சரியம், ஆனால், உண்மை.

மாநாடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.




கை கடிகாரம் பரிசளிப்பு
இதனிடையே மாநாடு படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து சிலம்பரசன் இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த சிலம்பரசனுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா - ஹிந்தியில் இன்னும் கிடைக்காத வினியோகஸ்தர்புஷ்பா - ஹிந்தியில் இன்னும் ... ஐதராபாத்தில் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் 'வலிமை' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in