புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கில் உருவான 'பாகுபலி' இரண்டு பாகங்களும், இந்தியா முழுவதும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலைக் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். அவரது வியாபார எல்லையும் விரிவடைந்து, அவரது சம்பளமும் உயர்ந்தது.
அந்த ஆசையில் தெலுங்கில் பல நடிகர்கள் தற்போது தங்களது படங்களை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறார்கள். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் 'புஷ்பா' படத்தையும் அப்படித்தான் வெளியிட உள்ளார்கள். ஆனால், ஹிந்தியில் படத்தை வெளியிட இன்னமும் சரியான வினியோகஸ்தர் கிடைக்கவில்லையாம்.
'பாகுபலி' படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிட்டார். அது போல தங்களது படத்திற்கும் பிரபலமான நிறுவனம் வெளியிட்டார்தான் வரவேற்பு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கேஜிஎப் 2 படத்தை பிரபல பர்ஹான் அக்தர் நிறுவனமும், 'லிகர்' படத்தை கரண் ஜோஹர் நிறுவனமும் ஹிந்தியில் வெளியிடுகிறது. அது போல தங்களது 'புஷ்பா' படத்திற்கு பெரிய நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.