'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் |
தமிழ் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர் என இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் மணிரத்னம். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தனது தனித்துவத்தையும் பெயரையும் இன்னமும் காப்பாற்றி வருகிறார்.
பொதுவாக ஒரு இயக்குனர் தனது படத்தை முடிப்பதற்குள் அதை பல முறை பார்த்துவிடுவார்கள். இருந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்கும் போது தான் அந்தப் படத்தை இயக்கிய மொத்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும்.
ஆனால், இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய படங்களை தியேட்டருக்குச் சென்று பார்த்து 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். தியேட்டர்களில் பார்க்கும் போது படத்தில் இருக்கும் தவறுகள் என்னவென்பது தெரிந்துவிடும், அதனால் தியேட்டர்களில் பார்ப்பதில்லை என அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தங்கள் படங்களில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசத் தயங்கும் போது, இத்தனை வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் தன் படங்களில் தவறுகள் இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதே பெரிய விஷயம்தான்.
மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.