விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ராதா. ஆனால் சினிமாவில் பெரிதாக எதிர்காலம் இல்லாததால் பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதா பின்னர் அவரை விவாகரத்து பெற்றார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை இரண்டாவதாக திருணம் செய்து கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த ஏப்ரல் அவர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் ராதா. அதன்பிறகு இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்தபுகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக கூறிய வசந்தராஜா, போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருப்பவர், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இளம்வருதி, பாரதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.